Pages

Sunday, 22 September 2013

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

மஞ்சள் : இந்திய உணவுகள் அனைத் திலும் சேர்க்கப்படும் மஞ்சுள் தூளில், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும் சக்தியானது உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

பூண்டு : அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு, இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மிளகாய் : உடலில் உள்ள கொழுப்புக் களை கரைப்பதில் மிளகாய் மிகவும் சிறப்பான பொருள். ஏனென்றால், அதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை தங்க விடாமல் செய்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கிறது.

முட்டை : தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய புரோட் டீன், கொழுப்பு மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் போன்றவை கிடைத்து, எனர்ஜி மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல் எடை குறையும்.

எலுமிச்சை : இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சாப்பிடக் கூடிய உணவுப் பொருள் தான் எலுமிச்சை. இத்தகைய எலுமிச்சையை தினமும் ஜுஸ் போட்டு குடித்து வந்தால், நிச்சயம் உடல் எடை சரியான அளவில் இருக்கும்.

பட்டை : பட்டையை உணவில் சேர்த்தால், கொழுப்புக்கள் அதிகம் சேராமல் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, ரத்தத்தில் உள்ள சர்க் கரையின் அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

காபி : காபியை குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும். எனவே தினமும் 2 கப் காபி குடிப்பது நல்லது. குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், உட லுக்கு கேடுதான் விளையும்.

முட்டைகோஸ் : பெரும்பாலான இந்திய சாலட்டுகளில் முட்டைகோஸா னது பச்சையாக சேர்க்கப் படும். இவ்வாறு முட்டை கோஸை பச்சையாக சாப்பி டுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் பச்சையாக முட்டை கோஸை சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத் தப்படுவதோடு, கார்போட் ஹைட்ரேட் கொழுப்புக்களாக மாறாமல் இருக்கும்.

வாழைப்பழம் : வாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைப்ப தோடு, அதிகப்படியான நார்ச்சத்தும் கிடைக்கும். மேலும் இது எடை குறைவுக்கும் வழி வகுக்கும்.

தக்காளி : தினமும் சமையலில் சேர்க்கப்படும் தக்காளியை அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் தேவையில்லாத கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.

கடுகு எண்ணெய் : சமையலில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக் கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஒல்லியாகவும் வைத்திருக்க உதவும்.

மோர் : இந்தியாவில் குடிக்கப்படும் ஸ்பெஷல் பானங்களில் ஒன்று தான் மோர். இந்த மோர் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, குறைவாக கலோரிகளைக் கொண்டது. அதிலும் இதில் உள்ள சிட்ரிக் எசன்ஸ், கொழுப்புக்களை கரைக்க உதவியாக இருக்கும்.

ஆப்பிள் : ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, இதனை சாப்பிட்டால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிபுரியும்.

பாசிப்பருப்பு : பாசிப் பருப்பில் கொழுப் புக்கள் குறைவாக இருப்பதால், அது கொலஸ்ட்ரால் பிரச்சினையை எதிர்த்துப் போராடும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை உடலுக்கு தரு கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அதிகம் உட்கொள் வது மிகவும் சிறந்தது.

தேன் : தேன் இந்தியாவில் மட்டு மின்றி உலகம் முழுவதும் சுவைக்காக உணவில் பயன் படுத்தும் ஒரு பொருள். ஆனால் இந்த உணவுப் பொருள் இந்தி யாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும் இருக்கக்கூடியது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில், சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

தயிர் :  குறைந்த அளவு கொழுப் புள்ள தயிரில் கலோரிகள் குறைவாகவும், சிட்ரிக் ஆசிட் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை குறைவிற்கு வழி வகுக்கும். மேலும் தயிரும் செரிமான பிரச்சினையை சரிசெய்து, உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்கும்.

கறிவேப்பிலை : இந்தியாவில் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொதுவான மூலிகை தான் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையில் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில் சாப்பிடும் போது, உணவில் உள்ள கறி வேப்பிலையை தூக்கி எறியாமல், அதனை சாப்பிட தொடங்குங்கள்.

க்ரீன் டீ : தற்போது நிறைய மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு க்ரீன் டீயை குடித்து வருகின்றனர். ஆனால் அந்த க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. ஆகவே தினமும் 12 கப் குடித்தால் போதுமானது.

மாதுளை : மாதுளையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, பிட்டாக இருக்கலாம்.

ஏலக்காய் : சமையலில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் ஏலக்காய், உடல் எடை குறைவதற்கும் பயன்படுகிறது. உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? இதை வாங்கி ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், ஒரே மாதத்தில் உங்களை யாரும் பார்த்து நீங்களே வியந்து போவீர்கள் என்று கூறி வெளிநாட்டு தயாரிப்புக்களை விற்கும் கூட்டம் அதிகரித்து விட்டது.

அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாம் தாய் நாட்டில் விளையும், எளிதில் கிடைக்கும் உணவு பொருட்களை தகுந்த அளவு உண்டாலே உடல் எடை தானாக குறைந்துவிடும், சோதித்து பாருங்கள், கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.

ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்
ப்ராக்கோலி :

இந்த பச்சை நிற காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

முட்டைகோஸ் :
வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜுஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.

காலிஃப்ளவர் :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பாகற்காய் :

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

வேப்பிலை :
வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

பூண்டு :
பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும்.

கேரட் :
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

எலுமிச்சை :
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

அன்னாசி :
பழங்களில் அன்னாசிப் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, ரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி டீ :
இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், ரத்தம் சுத்தமாக இருக்கும்.

பார்ஸ்லி :
சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.

நெல்லிக்காய் :
நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி யையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் எந்தவித தங்கு தடையின்றி இயங்க செய்வதில் ரத்தத்தின் பங்கு முக்கியமானது. சீரான ரத்த உள்ள மனிதனுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள்.

அந்த வகையில் உடலுக்கு ஒவ்வாத உணவு பண்டங்களை தவிர்த்து மேற்கூறிய உணவு பொருட்களை உண்டு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பிறருக்கு தானமாக கொடுக்கும் ரத்தத்தையும் சுகாதாரமானதாக கொடுப்போம்.

No comments:

Post a Comment